‘குமிழி’ அறிமுகமும் கையளிப்பும்

‘குமிழி’ என்னும் நூலின் ‘அறிமுகமும் கையளிப்பும்’ நிகழ்வு, 2020-09-06 அன்று பிற்பகல் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் சிலவற்றிலே இணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் படைப்பாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.  

‘தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’ (PLOTE) என்ற இயக்கத்திற்குள்ளே 1984-1985 காலகட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், நாவல் வடிவிலே இந்த நூல் புனையப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தில் அக் காலத்திலே இணைந்து செயற்பட்ட இந்த நூலின் ஆசிரியரான திரு. ரவி, தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவருகிறார். ஈழ விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளின் அக முரண்களை, விபரீதங்களைப் பதிவுசெய்யும் ஆவணமாகக் கருதப்படுகிற இந்த நூலானது, விடியல் பதிப்பக வெளியீடாகும்.

‘குமிழி’ நூல் அறிமுகமும் கையளிப்பும் நிகழ்வை, ‘Wide Vision Studio’ வீடியோவிலே பதிவுசெய்து வெளியிட்டுள்ளது. வீடியோ இணைப்பில் முழு நிகழ்வையும் காணலாம்.