சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஒளிப்பட நூல் நிகழ்விற்கான அழைப்பு

இலங்கை இறுதிப் போர் சார்ந்த காத்திரமான பதிவுகளைக் கொண்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் சுவிஸ் நாட்டிற்கான அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.

சூரிச் நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள Gessnerallee 8, 8001 Zurich என்னும் முகவரியில் அமைந்திருக்கும் House of anti-racism மண்டபத்தில் 2022-11-12 அன்று 15.00 மணியளவில் இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெறும்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் நண்பர்களையும் ஆர்வலர்களையும், கொடிய போரில் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் சார்ந்து பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிற அனைவரையும் இந்த ஒளிப்பட நூல் சார் நிகழ்விற்கு அன்போடு அழைக்கிறேன். இந்த அழைப்பினை, அனைவருக்குமான பொது அழைப்பாகவும் தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

ஈழத்தமிழரின் வலிகனையும் தேவைகளையும் சர்வதேச மட்டங்களுக்குக் காத்திரமாக எடுத்துச்செல்லும் இந்த ஒளிப்படப் பெருநூலின் வரவு, அரிதான வரலாற்று நிகழ்வு ஆகும்.

இந்த நூல் சார்ந்த நிகழ்வு, பல்வேறு தரப்பினரது பங்கேற்புடன் நிறைவடையும் என்று நம்புகிறேன்.

நிகழ்விற் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முற்கூட்டிய நன்றிகளைப் பதிவுசெய்கிறேன்.  

Wide Vision Studio சார்பாக,  
அமரதாஸ்